தென்றல் காற்றாய்

தென்றல் காற்றாய்
வந்தாய் நீ
என்னையே கட்டிச்
சென்றுவிட்டாயடி!

உயிரற்ற பொம்மையாய்
கிடக்கின்றேன்
உன் காதலால்!

அந்த பிரமன்
படைத்த தனிரக
படைப்போ நீ!
உன்னை படைத்த
பிரம்மனே மயங்கியிருப்பான்
உந்தன் அழகில்!
என்னவளே!
எந்தன் தேவதையே
என்முன்
மறுபடியும் தோன்றாயோ
தென்றலாய்??

உன்னை நான்
காணும் வேளையிலே
வானில் சிறகடித்துப்
பறப்பது போல்
ஒர் உணர்வு!

அப்படிப்பட்ட தேவதையே
எனக்கானால்
இந்த உலகமே
என் கையில்!