தமிழன் நகைச்சுவை - 2

 எச்சரிக்கை
இங்கே குறிப்பிட பட்டுள்ள பெயர்கள் யாவும் எனது சொந்த கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல (ங்கொய்யாலே என்னமா கற்பணை  பன்னிருக்கே, உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதுடா Jey) எனபதையும் ,  மற்றபடி இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்து எனது கற்பணை கலந்து எழுதியது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

முஸ்கி : படிச்சிட்டு என்னோட டவுசரை கிழிக்கனும்னா, நாடாவ கழுத்துல கட்டி தொங்க விடனும்னா, இல்ல சூஸ் பிழியனும்னா,  தனி ரூம்ல வச்சி நாலு பேருக்கு தெரியாம செய்ங்க, பப்ளிக்கா வேணாம் சொல்லிட்டேன்.
***********************************************************
1.

நம்ம பன்னிகுட்டி ராமசாமி தாய்லாந்துக்கு ஒரு குஜால் ட்ரிப் போயிட்டு வந்தவுடனே முத்துகிட்ட கேக்குறாரு,
முத்து என்னை பார்த்தா வெளிநாட்டுகாரன் மாதிரியா தெரியுது?.

முத்து : இல்லையே, ஏன் கேக்குறே?

ன்னிகுட்டி ராமசாமி :  தாய்லாந்துல ஒரு ஃபிகரு என்ன பாத்து நீ வெளிநாடானு கேட்டிச்சி அதான்.

***********************************************************
2.

சுற்றுலா பயணி : உங்க ஊர்ல பெரிய மனுசங்க யாராவது பிறந்திருக்காங்களா? ( நம்ம ஊர் பிரபலங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆசையில்)

மங்குனி : இல்லை சார், குழந்தைங்க மட்டும்தான் பிறக்குறாங்க.

***********************************************************
3.

ஆசிரியர் : காந்தி ஜெயந்தியை பற்றி சிறு குறிப்பு எழுதுங்க.

மங்குனி எழுதுறார் : காந்தி இந்தியா சுதந்திரம் வாங்க பாடுபட்டவர், ஆனா இந்த ஜெயந்தியை பற்றி எனக்கெதுவும் தெரியாது ( மனசுக்குள், இந்த ஃபிகரு யாருன்னு தெரிஞ்சா தேத்திருக்கலாமே?. வட போச்சே)
***********************************************************
4.

இண்டெர்வியூவில்

டேமேஜர் ரமேஷ்:  3 வது மாடியில நீ இருக்கும் போது தீப்பிடிச்சிருச்சினு கற்பணை பன்னிக்கோ, எப்படி அங்கிருந்து தப்பிப்பே?

பட்டாபட்டி : ங்கொய்யாலே கற்பனை பன்றத நிறுத்திருவேன் ( நமக்கு இருக்கிர அறிவுக்கும் தெறமைக்கும் இவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்குதே?.)
***********************************************************
5.

பன்னிகுட்டி ராமசாமி : என்னோட மொபைல் பில் எவ்வளவு?.
கஸ்டமர் கேர் லேடி : 123 டயல் பன்னினா கரண்ட்(current) பில் எவ்வளவுனு தெரியும் சார்.

பன்னிகுட்டி ராமசாமி : ஸ்டுபிட்,  நான் கேட்டது மொபைல் பில், கரண்ட்(Electricity) பில் இல்லை.

**************************************************************
6.

முத்து :  அந்த பொண்ணுக்கு காது கேக்காதுனு நினைக்கிறேன்

மங்குனி  : உனக்கு எப்படி தெரியும்?

முத்து : நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன்,    ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செப்பல்ஸ் புதுசுனு சொல்லிட்டுபோறா.
மங்குனி : சரி சரி பிய்ஞ்ச செருப்பு போட்டிருக்கிர பொண்ணா பார்த்து சொல்லு தேரினாலும் தேரும். (அப்பதான் செருப்பு பிய்ஞ்சாலும் பரவா இல்லைனு அடிப்பாய்ங்க, பரதேசி சாவட்டும்)

***********************************************************
7.

பருப்பு மோகன்  : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன்  : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு

( ஓவரா மொக்கய போடுராய்ங்கலே இவங்க ரெண்டு பேரையும் செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி பழி தீர்த்துகிடா என்ன?.)
***********************************************************
8.

ஃபிரபல பதிவர் Jey சாஃப்ட்வேர் கம்பனி இண்டெர்வியூவில்
டேமேஜர் ரமேஷ் :  உனக்கு M S Office தெரியுமா?

ஃபிரபல பதிவர் Jey : நீங்க அட்ரஸ் கொடுத்தா கரெக்டா அங்க போயிருவேன் சார். (ங்கொய்யாலே, வேலைகேட்டு வந்தா அந்த ஆபீஸ் தெரியுமா , இந்த ஆபீஸ் தெரிமானு டார்ச்சர் பன்றானே இந்த டேமெஜர்)

***********************************************************
9.

பருப்பு மோகன் : யேசு, புத்தர், கிருஷ்ணா, ராம், காந்தி அப்புறம், மஹாவீரர் இவங்களுக்கு இடையில உள்ள ஒற்றுமை என்னனு தெரியுமா? ( இவய்ங்க எல்லாம் யாருன்னு நம்மளயே கேட்ருவானோ)
மங்குனி அமைச்சர் : ஹா ஹா ஹா இது கூட தெரியாமலா அமைச்சரா இருக்கேன், இவங்க எல்லோரும் அரசு விடுமுறை நாள்ல பிறந்தவங்க.(தக்காளி கைல சிக்குனா விலா எலும்பை உருவி சூப் வச்சி குடிக்கலாம்னா, எட்ட நின்னு கேள்வி கேட்டுட்டு ஓடிபோய்ட்டானே, நாம அவ்வ்வளவு டெர்ரராவா தெரியுரோம்)
**************************************************************
10.

பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாம்? ( குத்துமதிப்பா கேப்போம், பன்னாட சாகட்டும்)

ஃபிரபல பதிவர் Jey :  ஆரஞ்சு பழத்தோட கலர் ஆரஞ்சு, ஆப்பிள் பழத்தோட கலர் ஆப்பிள் கிடையாது.( தக்காளி நம்ம புத்திசாலினு கொல்லபேருக்கு தெரியலையே?...)
***********************************************************

டிஸ்கி :  என்னோட முதல் பதிவுக்கு தந்த ஆதரவை தயவுசெய்து தரவும், கள்ள ஓட்டு போட்டாவது ஓட்டு எண்ணிக்கய அதிகமாக்கிருங்க