மழையே... ( கவிதை )


நீ வருவாய் என
தினம் தினம்
எதிர் பார்த்து
காத்திருக்கின்றேன்!

நீ வந்தால்
என்னவள்
குதித்து விளையாடுவாள்
அப்பொழுது ஒரு
ஓரமாய் நான்
நின்று ரசிப்பேன்
உன்னோடுவிளையாடும்
என்னவளை!

அந்த மேகமே
எனக்காகத்தான்
உன்னை அனுப்புகின்றனவா???
நீ விழும்
ஒவ்வொரு துளியும்
என் மனக்கதவை
தட்டுகின்றது!
நீ தினமும்
வர வேண்டும்
வருவாயா????